ஞாயிறு, 7 டிசம்பர், 2014

குறுங்கதை # 9 பழையசோறு









அது ஒரு செழுமையான கிராமம்.அக்கிராமத்து செல்வந்தரொருவனின் மகன்,திருமணமாகி குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த பொழுது அவனுடைய வீடு தினமும் கல்யாண வீடு போன்றே களைகட்டியிருக்கும். நன்பர்கள் கூட்டம் எந்நேரமும் அவனைச்சுற்றி அரட்டை சீட்டுக்கச்சேரி என் ஒரே அமர்ககளந்தான். இப்படிப்பட்ட கேளிக்கைகள் தொடர்வது அவ்வீட்டின் புது மணப்பெண்ணிற்கு பிடிக்கவில்லை.இதற்க்கு ஒரு முடிவு கட்டிவிட தீர்மானித்தாள்.


என்றும் போல் அன்றும் நன்பர்கள் கூடினர்,சீட்டுக்கச்சேரி ஆரம்பித்து வெகு ஜோராக போய்க்கொண்டிருந்தது.மதிய உணவு வேளை நெருங்கியதும்,புதுமணப்பெண்,” என்னங்க சாப்பாட்டு நேரம் வந்ததுகூட நினைவில்லாமல் சீட்டாடுகிறீர்களே,பழையசோறு ஆறிப்போகப்போகுது,சீக்கீரமா வந்து சாப்பிட்டுவிட்டு போங்க:என்று குரல் கொடுத்தாள்.நண்பர்களும் சற்று திகைத்துப்போனார்கள்
.

மாப்பிள்ளையும்,திகைப்புடன்,வீட்டிற்குள் சென்றான்,சுட சுட சோற்றையும் பல்வித காய்கறிகளையும் பரிமாறினாள்.ஆச்சரியப்பட்ட அவன் ஏன் என்று கேட்க தயங்கியவாறு உண்டுவிட்டு,மறுபடியும் திண்ணைக்குச்சென்று கச்சேரியைத் தொடர்ந்தான்,


இவ்வாறு தொடர்ந்து உணவுவேளையின்போது,பழைய சோறு சாப்பிட அழைப்பு வரும்,அங்கு சென்றால்,சுட சுட விருந்துணவு காத்திருக்கும்.மாப்பிள்ளையும் பொறுமையிழந்து,பழைய சோறு,பழைய சோறு என்று கூவிக்கூவி அழைத்து,என் மானத்தை வாங்கிவிட்டு,இப்படி தினம் தினம் விருந்து படைக்கிறாயே.இதர்க்கு என்னதான் அர்த்தம் “ என்று ஒருவழியாக அன்று கேட்டேவிட்டான்.


அந்தப் பெண் அலட்டிக்கொள்ளாமல் “ பழைய சோறு என்று சொல்லிவிட்டு வழக்கம்போல சுட சுட உணவு பரிமாறும்,என்னை பைத்தியம் என்று நினைத்துவிட்டீர்களோ? நீங்க சாப்பிடற உணவு,நீங்க சம்பாதித்தலிருந்து கிடைத்தல்லவே,இந்தசாப்பாடு உங்கள் மூதாதையருடைய சம்பாத்தியம்.அதனால்தான்,அதை பழையசோறு என்று கூறினேன்.

என்றைக்கு நீங்க உழைத்து சம்பாரித்து பணம் கொண்டு வந்து கொடுத்து,அதில் நான் சமைத்துப்போடுகிறேனோ,அன்றைய சமையல்தான், புத்தம் புது விருந்துணவு” என்று கூறிய மனைவியை, அன்றுதான் முதல் முறை பார்ப்பதுபோல் பார்த்து,வியப்படைந்தான்.


திருமுருக கிருபானந்த வாரியார் ஷ்வாமிகள்

கருத்துகள் இல்லை: