வெள்ளி, 21 நவம்பர், 2014

குறுங்கதைகள் --- முன்னுரை




வலைத்தளம்,ஆரம்பித்தவுடன் நான் சந்தித்த முதல் சவால் தமிழை(,எனது தாய் மொழியை) பிழையின்றி எழுதுவதுதான், பணி மொழியான (professional Language) ஆங்கிலத்தையே  பல ஆண்டுகளாக பயன்படுத்தியன் விளைவாக, தாய்மொழியைக் கையாளுவதிலேற்பட்ட சிக்கல்களும்,சிரமங்களும்,சொல்லி மாளாது.எனவே,ஒரு அகராதியை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமுண்டாகி, கூகுளாரை அனுகினேன்
.ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது,அது Pals eDictionary மூலம் வந்தது. ஆங்கிலத்தில் ஜாம்பவானாக கருதப்படும் அகராதிகள் போன்று அமைந்திருந்த ஒன்று கிடைத்தது,மட்டற்ற மகிழ்ச்சியளித்தது என்று கூறினால்.அது மிகையாகாது.
அத்தகைய அகராதியை புரட்டிக்கொண்டிருக்கும்போது,ஒரு வார்த்தை என்னை சுண்டியிழுத்தது.Anecdotes: இந்த வார்த்தைக்கு ஒரு நீண்ட விளக்கமிருந்தது,அதில் முதலில் காணப்பட்டது “தனியொரு நிகழ்வினையொட்டிய சிறுகதை” என்பது.சில விளக்கங்களுக்குப்பின், anecdotage:chattering old age,the age at which one is addicted to anecdotes: சிறுகதை சொல்வதில் முனையும் கிழ வயது. என்று காணப்பட்டது.இந்த விளக்கங்களின் தாக்கம்தான்,ஒரு புது முயற்சியை மேற்கொள்ள தூண்டியது,
கதைகள் படிப்பதிலுள்ள சுவாரசியத்தை சொல்லி தெரியவைக்கவேண்டிய அவசியமில்லை என்றுதான் கருதுகிறேன் .எத்தனை எத்தனை கதைகள் ! பஞ்சதந்திர கதைகள்,ஈசாப் கதைகள், தெனாலி ராமன் கதைகள், பீர்பால்-அக்பர் கதைகள்,பரமார்த்த குரு கதைகள் ,ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகள்,என அடுக்கிக்கொண்டே போகலாம். இவைகள் தவிற,சமீப காலமாக உலவிவரும் ஜென் கதைகள்,டாவோ கதைகள்,சீனாவின் பரிசுகள்.
  நமக்கு அதிகமாக அறிமுகமாத சுஃபி கதைகள் சிறப்பானவைகள், இஸ்லாமிய மறை மெய்ஞ்ன கோட்பாடுகளை உள்ளடக்கியவைகள், இத்தகைய பழம் கதைகளுக்கு போட்டியாக
,சுய முன்னேற்றம், மனிதநேயம், போன்றவைகளை  ஊக்குவித்து உற்சாகமூட்டும் நவீன கதைகள் ஏராளமாக உலவிக்கொண்டிருக்கிறன.
அக்கதைகள் பல்வித உணவுகள் போல உண்டு களிக்க காத்திருக்கின்றன,நாம் நமக்கு பிடித்த பதார்த்தங்களை தெரிவு செய்து உண்ண தடையேதுமுண்டோ?
அன்பர்களே,நான் நான் பதிவு செய்யப்போகும் கதைகள் பல உங்களுக்கு தெரிந்ததாகவிருக்கும்,ஏனெனில் இவைகளின் மூலம் ஒன்றுதான்.படைப்பாளிகள்தான்,பலர், நானும் அவர்களில் ஒருவன்,எனக்குப்பிடித்த,உங்களுக்கும் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில்,மேற் கூறிய என்றும் சுவை மாறா களஞ்சிய கதைகளை அவ்வப்போது உங்களுக்கு என் நடையில் வழங்கவிருக்கிறேன்..நிச்சயம் ரசிப்பீர்கள்,இராமாயணத்தையும்,மஹாபாரதத்தையும் திரும்பத் திரும்ப கேட்டு, படித்து ரசிப்பது போல.
காக்க காக்க கனகவேல் காக்க, என்பதுபோல் கதைக்க கதைக்க கருணை காட்ட என்று வேண்டி, குறுங்கதைகள் என்ற தொடரை எழுதி உங்களை மகிழ்விக்கவிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: