சனி, 15 நவம்பர், 2014

குறுங்கதை # 2 பாம்பென்றால்- - -!




   

அது ஒரு செழிப்பான ஊர்.திருவிழாக்களும் கொண்டாட்டங்களுமாக ஊரே கல கலப்பாகவிருக்கும்.காலட்சேபம் தெருக்கூத்து போன்றவைகளும் அன்றாட நிகழ்சியாகவிருக்கும்
வயல் வெளியிகளில் சிறுவர்கள் ஒடியும் குதித்தும் கும்மாளமடித்துக் கொண்டிருந்தனர்.அது சமயம் பாம்பொன்று அங்கு படுத்திருந்ததை கண்டு அலறிக் கொண்டு வீடு திரும்பினர்.
மறு நாள் சென்ற போதும்,பாம்பு படுத்திருந்தது, பயந்துகொண்டு விளையாடாமல் வீடு திரும்பினர்
,பாம்பின் அச்சுறுத்தலின் காரணமாக தொடரும் நாட்களிலும் சிறுவர்கள் விளையாட முடியவில்லை.
ஏமாற்றத்துக்குள்ளான சிறுவர்களில் தைரியசாலியான ஒருவன், விளையாட தடையாகவுள்ள பாம்பை தீர்த்துக்கட்டிவிடுவது என்று முடிவுசெய்தான்
அவன் தோழர்களும் அவனை ஊக்கப்படுத்தினார்கள்.
கல் ஒன்றை எடுத்து தன் முழு பலத்துடன் பாம்பை நோக்கி எறிந்தான். குறி தவரவில்லை .நச்சென்று பாம்பின்மேல் பட்டது.
ஒன்று பாம்பு,அடி வாங்கி செத்திருக்கவேண்டும், அல்லது சீறிக்கொண்டு அங்கிருந்தவர்களை கொத்த வந்திருக்கவேண்டும்.
என்ன ஆச்சரியம் அடிபட்ட பாம்பு எதுவுமே நடக்காதது போல் அசையாமல் படுத்திருந்தது.
பாம்பு அலட்டிக்கொள்ளாமல் இருப்பது, சிறுவர்களை  ஆச்சரியப்பட       வைத்ததைவிட பீதியைத்தான் உண்டாக்கியது.   
 இருப்பினும்  சிறுவர்கள்  அனைவருமே தைரியமாக ஒருவர் மாற்றி ஒருவர் கல் எறிவதும் பாம்பும் சும்மா இருப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.
அடிமேல் அடி வாங்கிய பாம்பின் நிலமைதான் மோசமாகி இறக்கும் தறுவாயிலிருந்தது.
இதை அறிந்த தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஆன்மீக சொற்பொழிவாளர்,அந்த கூத்து நடக்கும் இடத்திற்கு சென்று என்னதான் நடக்கிறதென்று அறிந்துகொள்ள விரும்பினார்
அங்கு சென்ற ஆன்மீக சொற்பொழிவாளரைக் கண்ட பாம்பு பேச ஆரம்பித்தது.’ ஐயா மஹானே ,நான் தங்கள் தீவிர ரசிகன்.தங்களுடைய அறிவுரை கேட்டு அதன்படி நடக்க முடிவெடுத்து, சிறுவர்கள் என்னை கல்லால் அடித்து துன்புறுத்தியையும் பொருட்படுத்தாமல் அமைதி காத்தேன், இன்று எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா, சாகும் தறுவாயில் இருக்கிறேன் என்று புலம்பியது..
கட கடவென சிரித்த ஆன்மீக சொற்பொழிவாளர்,’ அட முட்டாளே, மக்களை துன்புறுத்தாதே, என்று நான் கூறியதை தப்பாக புரிந்துகொண்டிருக்கிறாய்.. பாம்பாகிய நீ கொத்தினால் துன்புறுத்துவதாகும். ஆகையால் சிறுவர்களை தீண்டாமலிருந்தது சரி,
ஆனால் நீயே துன்பத்திற்குள்ளாகும் போது, உன்னைக்காப்பாற்றிக்கொள்ள படமெடுத்து சீறி பயமுறுத்தி சிறுவர்களை விரட்டியடிக்கக்கூடவா  உனக்கு தோன்றவில்லை ,என்று கூறிவிட்டு  ஊருக்கு திரும்பினார்..
பிறகென்ன ,சீறும் பாம்பை சீண்டுமளவுக்கு

தைரியமுள்ளவர்களா அச்சிறுவர்கள்.

மேlலாளர்களுக்கு, இக் கதை ஒரு தந்திரததை கற்றுக்கொடுக்கிறது என்பது என் கருத்து: ஒருவருடைய அதிகாரத்தை (குணாம்சத்தை) தினம் தினம் தம்பட்டமடித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் அவ்வப்பொழுது, அதிகாரத்தின் வலிமையை  தங்கள் இயற்புக்கேற்ப, ஞாபகபடுத்தும்படியாக நடந்துகொள்வது  நிர்வாகம் சிறப்பாக செயல்பட பெரிதும் துணை புரியும்..

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கதை அருமை... உண்மை...

Andichamy சொன்னது…

நன்றி தனபால்.

இமா க்றிஸ் சொன்னது…

அருமையான கருத்தை அழகாகக் கதை வடிவில் சொல்லியிருக்கிறீர்கள். உண்மைதான். எல்லாச் சமயங்களிலும் அமைதியாக இருப்பது காரியத்திற்காகாது.

Andichamy சொன்னது…

நன்றி.இராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகளிலிருந்து--